தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட 2 முதுமக்கள் தாழிகளில் மனிதனின் அனைத்து எலும்புகளும் கிடைத்திருக்கிறது. இது கடந்த 8 மாதங்களாக ஒன்றிய தொல்லியல் துறை நடத்திவரும் அகழாய்வில் இதுவரை 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்கிடைத்த முதுமக்கள் தாழிகளில் ஒன்று அல்லது 2 எலும்புகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 முதுமக்கள் தாழிகளில் தலை, தாடை, பல், கை, கால், முதுகெலும்புகள் கிடைத்திருக்கிறது.