சென்னை: மாநகர பஸ் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது எச்சிலை தொட்டு வழங்கக்கூடாது என எம்டிசி நிர்வாகம் அனைத்து நடத்துனர்களையும் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, எம்டிசி நிர்வாகம் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நடத்துனர் பயணச்சீட்டு வழங்கும்போது பயணச்சீட்டு கட்டிலிருந்து பயணச்சீட்டை எடுக்கும்போதும் பயணச்சீட்டுகள் ஒன்றொடு ஒன்று சேர்ந்து இருப்பதால் பிரித்து எடுக்க ஒரு சில நடத்துனர்கள் எச்சில் தொட்டு பயணச்சீட்டுகளை எடுத்து பயணிகளுக்கு கொடுப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதால் பயணிகள் பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பொழுது மிகுந்த மன உளைச்சலுடன் பெற்றுக்கொள்கின்றனர்.