லக்னோ: உபி.யில் சமாஜ்வாடி கட்சியின் இளைஞர், மகளிர் அணி உள்பட அனைத்து தேசிய, மாநில, மாவட்ட அளவிலான செயற்குழு நேற்று முதல் முழுவதுமாக கலைக்கப்பட்டுள்ளன. உபி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நடந்த சட்டப்பேரவையில் சமாஜ்வாடி கட்சி 124 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இருப்பினும், சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில், சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக கருதப்படும் ராம்பூர், அசம்கர்க் மக்களவை தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. இந்த தொகுதிகள் கை நழுவி போனது சமாஜ்வாடிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.