சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் காலமானார். இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பினால் தான் இறந்தார் என்ற செய்தி ஊடகங்களில் பரவியது. இந்த நிலையில் மீனா, கணவரின் இறப்புக்கு பின்னர் தனது சமூக வலைதளத்தின் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் ’எனது அன்பு கணவர் வித்யாசாகர் இறப்பால் நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். இந்த தருணத்தில் அனைத்து ஊடகங்களும் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்து அனுதாபம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.