சாத்தான்குளம் அருகே விஷம் வைத்து 20 கோழிகள் சாகடிப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே 20 கோழிகளை விஷம் வைத்து கொன்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே உள்ள எள்ளு விளை கீழத்தெருவைச் சேர்ந்த ராஜன் மகள் கலைச்செல்வி (36). இவர் வீட்டில் கடந்த மூன்று வருடமாக கோழிகள் வளர்த்து  பராமரித்து வருகிறார். தினமும் கோழிகளை காலையில் திறந்து மாலையில் அடைப்பது வழக்கம்.

இதேபோல் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து கோழிகளை திறந்து விட்டுள்ளார். மாலையில் கூட்டில் அடைவதற்கு கோழிகளை தேடியுள்ளார். அப்போது அவைகளை காணவில்லை.

வீட்டின் பின்பக்கம் உள்ள எள்ளுவிளை கருவைகாட்டில் சென்று பார்த்த போது 20 கோழிகள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. கோழிகளை மர்ம நபர் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இதுகுறித்து கலைச்செல்வி தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ நெல்சன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: