திருச்செந்தூர்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது பாஜ அரசுதான் என்று திருச்செந்தூரில் தமிழக சட்டமன்ற குழு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, தமிழக சட்டமன்ற குழு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று வந்தார். தரிசனம் செய்த பின்னர் அவர் அளித்த பேட்டி: 2024ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்துதான் பாஜ போட்டியிடும். அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஒற்றை தலைமை போன்ற சிறுசிறு சலசலப்புகள் இருப்பது இயல்பு.