திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா; கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

திருவில்லிபுத்தூர்: ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பெரியாழ்வார் சன்னதியில் பெரியாழ்வார் சுவாதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்தவகையில், இந்த ஆண்டுக்குரிய ஆனி சுவாதி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்த திருவிழா 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தினமும் பெரியாழ்வார் பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்து, வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு பெரியாழ்வார் சந்நிதியில் இன்று காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பெரிய ஆழ்வார் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

கொடிபட்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: