ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட வடக்கு, மேற்கு, கிழக்கு, பூவிருந்தவல்லி கிழக்கு, மேற்கு, எல்லாபுரம் மத்திய, வில்லிவாக்கம் ஆகிய ஒன்றியங்களில் திமுகவின் 15-வது உள்கட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று காலை வேட்புமனுக்கள் வழங்கப்பட்டன. பின்னர் நேற்று மாலை தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.