விஜய் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை

திருவனந்தபுரம்: மலை யாள புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு விசாரணைக்காக எர்ணாகுளம் தெற்கு போலீசில் ஆஜரானார். பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். மாலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜூலை 3ம் தேதி வரை விஜய் பாபு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். விஜய் பாபுவின் அடுக்குமாடி குடியிருப்பு மட்டுமின்றி, கொச்சியிலுள்ள சில ஓட்டல்களில் வைத்தும் தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை புகாரில் கூறியிருந்தார்.

 இதையடுத்து விசாரணை நடைபெறும் நாட்களில், பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் ஓட்டல்களுக்கும் அவரை அழைத்து சென்று கூடுதல் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், விஜய் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவும் போலீசார் தீர்மானித்துள்ளனர். இன்று அல்லது நாளை இதற்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: