திருவனந்தபுரம்: மலை யாள புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு விசாரணைக்காக எர்ணாகுளம் தெற்கு போலீசில் ஆஜரானார். பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். மாலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜூலை 3ம் தேதி வரை விஜய் பாபு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். விஜய் பாபுவின் அடுக்குமாடி குடியிருப்பு மட்டுமின்றி, கொச்சியிலுள்ள சில ஓட்டல்களில் வைத்தும் தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை புகாரில் கூறியிருந்தார்.