மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

துரைப்பாக்கம்: சென்னை துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் அரசு நிதியுதவி பெறும் டி.பி.ஜெயின் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் சுயநிதி கல்லூரி ஒன்றும் உள்ளது. கடந்த 2 வருடங்களாக அரசு உதவி பெறும் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இந்நிலையில், அங்குள்ள சுயநிதி கல்லூரியில் மட்டும் மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர் சேர்க்கை நடத்தாத அரசு உதவிபெறும் டி.பி.ஜெயின் கலைக்கல்லூரியை தமிழக அரசு கையகப்படுத்த வலியுறுத்தி, நேற்று காலை கல்லூரி நுழைவுவாயில் முன்பு, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Related Stories: