கொழும்பு: இலங்கையில் எரிபொருட்கள் விலையேற்றம் காரணமாக நாடு முழுவதும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை உள்ளது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அண்மையில் பெட்ரோல், டீசல், கோதுமை மாவு, உணவு வகைகள், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மற்றும் ஏனைய அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்த்தப்பட்டது.