பராமரிப்பு பணி காரணமாக சைதாப்பேட்டை மயானம் மூடல்: மாநகராட்சி தகவல்

சென்னை: சைதாப்பேட்டை மயானபூமியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், பொதுமக்கள் கண்ணம்மாபேட்டை மற்றும் நெசப்பாக்கம் மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், 139வது வார்டுக்குட்பட்ட சைதாப்பேட்டை மயானபூமியின் எரிவாயு தகன மேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் 27.06.2022 முதல் 05.07.2022 வரை இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் மேற்கண்ட நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள கண்ணம்மாபேட்டை மற்றும் நெசப்பாக்கம் மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories: