மதுரை: மஞ்சள் ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தடுப்பணை கட்டுவது அரசின் கொள்கை முடிவு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக மட்டுமே என அரசு தெரிவித்தது. தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் தடுப்பணை கட்டப்பட உள்ளது என மதுரை கிளையில் அரசு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.