ரூ.50 கோடி மதிப்புள்ள காளத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பு: அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், காளத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், காளத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 14.51 ஏக்கர் நிலங்கள் மற்றும் 12 கடைகள் ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பூட்டி இலாக்கா முத்திரையிட்டு சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வின் போது, வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சித்ரா தேவி, பென்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்), திருக்கோயில் செயல் அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: