தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள நாகசமுத்திரத்தை சேர்ந்தவர் சிவராமன் மகன் சிலம்பரசன் (22). பொக்லைன் ஆபரேட்டர். இவர் திப்பம்பட்டியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோருக்கு தெரியாமல் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மாணவி மாயமானதால் இதுபற்றி பெற்றோர் கிருஷ்ணாபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.