பெண்ணை அடித்துக்கொன்று சாக்கு பையில் கட்டி புதைப்பு: கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு

கள்ளக்குளிச்சி: பெண்ணை அடித்துக் கொன்று சாக்கு பையில் கட்டி சுடுகாட்டில் புதைத்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரபுரம் அடுத்த பாக்கம்புதூர் கிராமத்திற்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. அதில் கடந்த சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் குழிதோண்டி ஏதோ புதைத்ததாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பொதுமக்கள் சொன்ன இடத்தில் தோண்டினர். அப்போது சுமார் 2அடி தோண்டியவுடன் சாக்கு மூட்டை சிக்கியது. அதனை வெளியில் எடுக்கும்போது துர்நாற்றம் வீசியது.

பின்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சாக்கு மூட்டையை பிரித்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இரண்டு சாக்கு பையால் தலை மற்றும் கால் வழியாக இணைத்து சாக்கை தைத்ததும், சடலம் அழுகிய நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக யூரியா உரத்தை சாக்கில் கொட்டி தைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சடலமாக கிடந்த பெண்ணின் கழுத்துப்பகுதியில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. எனவே மர்ம நபர்கள் அவரைஅடித்துக்கொன்று சாக்கில் மூட்டையாக கட்டி புதைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சங்கராபுரம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கராபுரம் மற்றும் சுற்றுப்புற காவல்நிலையங்களில் பெண் மாயம் குறித்த புகார் எதுவும் வராத நிலையில் இந்தப்பெண் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரை வெளியூரில் கொலை செய்து சாக்குமூட்டையில் அடைத்து சங்கராபுரம் சுடுகாடு அருகே புதைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பெண்ணை அடித்துக்ெகான்று சாக்குமூட்டையில் கட்டி புதைத்துள்ள சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: