சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

பெரம்பூர்: புளியந்தோப்பில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர் தெற்கு பகுதி 73வது வட்ட திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு `வேருக்கு விழா - 22’ என்ற நிகழ்ச்சியில் `அன்பின் நிலமானவர். அறத்தின் விதையானவர். போராளியின் புகழரங்கம்’ என்ற தலைப்பில் சென்னை புளியந்தோப்பில் நேற்று முன்தினம் மாலை மாபெறும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஷாநவாஸ், திராவிட கழக செயலாளர் அருள்பொழி, சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினர் பாலபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பகுதி செயலாளர் சாமிகண்ணு மற்றும் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: