சென்னை: பொதுக்குழுவில் அனைத்து முடிவுகளும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படும். தர்மம் வென்றிருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்று குறிப்பிட்டார்கள், இப்போது தர்மம் வென்றுள்ளது. ஆacகவே தர்மம் என்றைக்கும் நிலைத்திருக்கும். என்றைக்குமே பொதுக்குழுவிற்கு தான் அதிகாரம் இருக்கிறது. ஆகவே பொதுக்குழுவில் அனைத்து முடிவுகளும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு மீண்டும் அதிமுக எதிர்காலத்தில் வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெறும் என்பதே தீர்ப்பு. தற்போது தர்மம் வென்றியிருக்கிறது.