சென்னை: எம்டிசி பேருந்துகளில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், 60 வயதுக்க மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2022 ஜூன் மாதம் வரை பயணம் செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அடுத்த அரையாண்டிற்கு, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் 40 மையங்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.