திண்டுக்கல் : மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பொதுமக்கள் கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச் சென்றனர்.திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சி, மறவபட்டி கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில், ஊர் மக்கள் சார்பில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில், சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மறவபட்டியிலிருந்து ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக வந்து குளக்கரையில் உள்ள கன்னிமார் மற்றும் கருப்பண்ணசாமி கோயிலில் சாமி கும்பிட்டனர்.