மீனம்பாக்கம்: சவுதி அரேபியாவிலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை சென்னை வந்து கொண்டு இருந்தது. அதில் 239 பயணிகள் பயணித்தனர். அதில் சென்னையை சேர்ந்த 35 வயது பெண் பயணி ஒருவர் வந்தார். அவருடைய இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் தஞ்சாவூரை சேர்ந்த 45 வயதுடைய ஆண் பயணி ஒருவர் வந்தார். அவர் சவுதி அரேபியாவில் டாக்டராக பணியாற்றுகிறார். அந்த டாக்டர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த 35 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் விமானத்திலேயே கத்தி கூச்சல் போட்டார். விமான பணிப் பெண்களிடம் புகார் கூறினார். அவர்கள் விமானியிடம் தகவல் தெரிவித்தனர். அதோடு அந்த டாக்டரை விமான பணிப்பெண்கள் கடுமையாக எச்சரித்தனர்.