சென்னை: காஷ்மீர் பண்டிட்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தொடர்பாக நடிகை சாய் பல்லவி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்துள்ளார். பிரபல நடிகை சாய் பல்லவி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தேன். இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எது சரி, எது தவறு என்று கூற முடியாது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை காண்பித்தார்கள். கொரோனா லாக்டவுன் காலத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற நபரை கும்பல் ஒன்று முஸ்லிம் என்று சந்தேகித்து அவரை அடித்துக் கொன்றது. மேலும், அவரை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுமாறு கோஷமிடச் செய்தனர். இதற்கும் காஷ்மீரில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இரண்டும் வன்முறைதான்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.