திருவாரூர்: திருவாரூரிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தின் பொதுவிநியோக திட்டத்திற்காக ஆயிரத்து 250 டன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் மெ.டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.