திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கலைஞர்: க. சுந்தர் எம்எல்ஏ பேச்சு

செய்யூர்:  திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்,  ‘மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கலைஞர்’ என உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் பேசினார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சூனாம்பேடு பேருந்து நிலையம் அருகே நேற்று நடந்தது. சித்தாமூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சிற்றரசு தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரேமா சங்கர், மாவட்ட குழு உறுப்பினர் சந்திரகுமார், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணன்,  கார்த்திகேயன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜீவா பூலோகம், பாரதி காண்டீபன், இனியமதி கண்ணன்,  கண்ணப்பன், சூனாம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ஜே.எஸ்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் முரளி அனைவரையும் வரவேற்றார்.

இக்கூட்டத்தில், ‘சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் மற்றும் பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ‘உலக வரலாற்றிலேயே 80 ஆண்டு காலம் பொதுமக்களுக்காக உழைத்த ஒரே தலைவர் கலைஞர் ஆவார். அவர், மறைந்த போதிலும் திமுக நிர்வாகிகள் கலைஞர் என்று கோஷம் எழுப்பிய உடன் வாழ்க என்று கோஷம் எழுப்புவர். தலைவர் கலைஞர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்’ என்றார்.  கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் வடவள்ளி ராமலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், இடைக்கழிநாடு பேரூர் செயலாளர் இனியரசு, கிளை செயலாளர் ரவிக்குமார், திமுக நிர்வாகிகள் ரவீந்திரநாத், பாண்டுரங்கன், பாரத், நிர்மல்குமார், பால்ராஜ், ராஜேந்திரன், தருமன், கண்ணகி வசந்தராஜ், வேதாசலம், ஆறுமுகம்,  சிவனேசன், பாலசுந்தரம்.  முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயன் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: