ஜாஞ்கிர்: சட்டீஸ்கரில் ஆழ்துளை குழாய் கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன், 5 நாட்களுக்கு பின் நேற்று உயிருடன் மீட்கப்பட்டான். சட்டீஸ்கரின் ஜாஞ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள பிக்ரிட் கிராமத்தில் கடந்த 10ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தனது வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த ராகுல் சாஹூ என்ற 11 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனை தொடர்ந்து அன்று மாலை சுமார் 4 மணியளவில் சிறுவனை மீட்கும் முயற்சிகள் தொடங்கின. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.