திண்டுக்கல் : திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் அகற்றப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் உள்ள விரிவாக்கப் பகுதிகளில், குப்பைகள் அகற்றப்படாதால், சாலையோரம் குவிந்து கிடக்கிறது. கேசவன் நகர் அருகில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த தொட்டியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.