திண்டிவனம் அருகே தொழிலாளி வீட்டில் நகைகள் திருட்டு

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஈச்சேரி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு கோயில் திருவிழாவையொட்டி சாமி வீதியுலா நடந்தது. இந்நிலையில், கோபால் மகன் பூபாலன் (34) என்பவர் தனது கூரை வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, யாரோ மர்ம நபர் கதவின் அருகே இருந்த பொந்து வழியாக கையைவிட்டு உள் தாழ்ப்பாளை திறந்துள்ளார்.பின்னர் வீட்டின் உள்ளே சென்று பீரோவில் இருந்த 1.5 பவுன் தங்க நகைகள், 250 கிராம் மதிப்புள்ள 2 வெள்ளி கொலுசுகள்,  ரூ.5ஆயிரத்தை திருடி சென்றுள்ளார்.இதுகுறித்து பூபாலன் அளித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: