ஆவடி: ஆவடியில் 3 நாட்கள் நடந்த உணவு திருவிழா நிறைவு பெற்றது. கடைசி நாளில் ஏராளமானோர் குவிந்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவடியில் 3 நாள் உணவு திருவிழா நடந்தது. இதில் 130 அரங்குகள் அமைக்கப்பட்டு வெளிநாட்டு உணவகங்கள் மட்டுமின்றி இயற்கை உணவுகள், துரித உணவுகள், சைவம், அசைவம் என அனைத்து வகையான உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் குளிர்பானம், ஐஸ்கிரீம் என வெவ்வேறு பிரிவுகளில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான மக்கள், தங்களுக்கு பிரியமான உணவுகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.