முல்தான்: பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி முல்தானில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 269 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சதாப்கான் 86 (78பந்து), இமாம் உல்ஹக் 62, ஃபகார் ஜமான் 35 ரன் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் 37.2 ஓவரில் 216 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 53 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.