முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை சங்கேந்தி கடைத்தெரு கிழக்கு கடற்கரை சாலை வளைவில் வாய்க்கால் தடுப்புசுவர் உடைந்ததால் வாகன விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கடைத்தெரு கிழக்கு கடற்கரை சாலை வளைவில் இருந்த வாய்க்கால் தடுப்புசுவர் சில ஆண்டுக்கு முன்பு நடந்த விபத்தின்போது வாகனம் மோதி உடைந்து விழுந்தது. பின்னர் அதில் நெடுஞ்சாலைதுறையினர் பெயரளவில் ஒரு சுவரை கட்டிச் சென்றனர். அதுவும் அடுத்த மாதத்தில் உடைந்து காணாமல் போனது. பின்னர் மீண்டும் கட்டுவதும், காணாமல் போவதும் இங்கு வாடிக்கையாக உள்ளது. ஆனால் நெடுஞ்சாலைதுறை நிரந்தரமாக இந்த தடுப்பு சுவர் கட்ட முயற்சி மேற்க்கொள்ளவில்லை.