நெல்லை : நெல்லை டவுன் பாட்டப்பத்து பகுதியில் துவைக்க வைத்திருந்த 800 சேலைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் அருகே இருந்த மின்மோட்டாரும் திருடுபோனது.
நெல்லை டவுன் பாட்டப்பத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (47). சலவை தொழிலாளியான இவர், பாட்டப்பத்து நபிகள் நாயகம் தெருவில் உள்ள பலவேசக்காரன் கோயில் வளாகத்தில் துணிமணிகளுக்கான மூட்டைகளை அடுக்கிவைத்து சலவை செய்து பின்னர் கடைக்காரர்களிடம் ஒப்படைப்பது வழக்கம். இதே போல் சம்பவத்தன்று இரவு சேலைகள் உள்ளிட்ட துணிமூட்டைகளை கடையில் அடுக்கிவைத்து விட்டு வீட்டுக்குச் சென்றார்.