சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதல்நாளில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் படித்த அரசு நடுநிலைப்பள்ளியில் ரோஜாப் பூ, பலூன், இனிப்புகளுடன் வரவேற்றனர். மதுரை ஊமச்சிகுளம் அரசு பள்ளியில் பிரமாண்டமோட்டு, பட்லு பொம்மை மூலம் ரோஜாப் பூ, சாக்லேட் தந்து வரவேற்றனர்.