திருப்போரூர்: திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் குருபூஜை நேற்று நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலை உருவாக்கிய சிதம்பர சுவாமிகள் கண்ணகப்பட்டு கிராமத்தில் மடத்தை நிறுவி அங்கிருந்தபடி திருப்போரூர் கோயிலை நிர்வகித்து வந்தார். அவர் மறைந்த வைகாசி விசாக நாளில் ஆண்டு தோறும் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிதம்பர சுவாமிகளின் 363ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று கண்ணகப்பட்டு சிதம்பர சுவாமிகள் மடத்தில் நடந்தது.