பொன்னேரியில் கட்டுமானம், தொழில் கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் கூட்டமைப்பு சார்பில் பப்ளிக் நெட் சென்டர் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த அமைப்பின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும் இந்த அமைப்பின் மாநில தலைவருமான பொன்.குமார் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து துவக்கி வைத்தார். சங்க நிர்வாகிகள் யுவராஜ்,வி.என்.கண்ணன், ஜெகதீசன், ராஜீவ்,அஜ்மீரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் பிரசாத் நன்றி கூறினார்.

Related Stories: