திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் அலுவலகம் சார்பில் தொழிற்பயிற்சி முடித்தோருக்கான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடத்தி வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், அம்பத்தூர் அரசு ஐடிஐ வளாகத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளை சேர்ந்த தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள், பாலிடெக்னிக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் சேர்க்கைக்கான முகாம் வரும் 13 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் பங்கேற்க உள்ளன.