பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே க.புதுப்பட்டி-கேசராபட்டி சித்தனத்தான் கண்மாய் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஜாதி, மதம் பாராமல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கண்மாயில் குவிந்து பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி மீன்களோடு மீன்களாக துள்ளிக் குதித்து போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன் பிடிக்கத்தொடங்கினர்.