செய்யூர்: செய்யூர் அருகே நடந்த கலைஞரின் பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில், ‘13 முறை திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்ற பெற்ற வரலாறு இந்தியாவிலேயே ஒரே தலைவர் கலைஞர்தான்’ என எம்எல்ஏ சுந்தர் பேசினார்.செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் பவுஞ்சூரில் நடந்தது. இதில், லத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.கிளை கழக செயலாளர் லோகநாதன் வரவேற்றார். கட்சி நிர்வாகிகள் வெங்கட்ராமன், வெங்கடேசன், ராஜ்குமார், சுந்தரவடிவழகன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ மற்றும் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.கூட்டத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் பேசுகையில், ‘13 முறை திமுகவின் வேட்பாளராக, உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற, ஒரே தலைவர் கலைஞர்.