சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கலைவாணி என்பவர் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் கலைவாணி உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். கலைவாணி உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.