மும்பை: பிரபல பாடகர் கே.கே.வின் மரணத்திற்கான காரணம் குறித்து தற்போது முழு விவரம் தெரியவந்துள்ளது. அவரது மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவமனை அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். பிரபல பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் என்னும் கே.கே. கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியின் போது பங்கேற்று பாடினார். அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார், கேகேவின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று குறிப்பிட்டிருந்தனர்.