மதுராந்தகம்: சிதம்பரம் முத்தையா நகரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தினை செய்து வைத்தார்.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக குரு பங்காரு அடிகளார் நேற்று முன்தினம் காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைப்பதற்காக மேல்மருவத்தூரில் இருந்து சிதம்பரம் சென்றார். பங்காரு அடிகளாருக்கு வழிநெடுகிலும் செவ்வாடை பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு சிதம்பரம் முத்தையா நகரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தை சென்றடைந்தார். அங்கு, பங்காரு அடிகளாருக்கு கடலூர் மாவட்டம், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பாக இயக்க நிர்வாகிகள் பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தனர்.மேலும், பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் கோபுர கலசத்திற்கு வேள்வியில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்து தீப ஆராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.