உடல் நலக்குறைவு சித்து மருத்துவமனையில் அனுமதி

சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து 34 ஆண்டுகளுக்கு முன் சாலை தகராறில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து உள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் கடந்த 20ம் தேதி பட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சித்துவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் நேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சண்டிகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மேலும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தான் சித்து பட்டியாலாவில் உள்ள ராஜேந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிறையில் அவர் சிறப்பு உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: