ஆலந்தூர்: ஆதம்பாக்கம் ஏரிக்கு பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் எச்சரித்துள்ளார். சென்னை ஆதம்பாக்கம் ஏரி மற்றும் ஏரிக்கரையினை ₹8.25 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் என்.சந்திரன், கிண்டி வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்த்தனி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், மின்வாரிய கோட்ட பொறியாளர் கணபதி, மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.