சென்னை: சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என சிசகலா நினைக்கிறார் எனவும் கூறினார். வி.கே.சசிகலா விரும்பினால் பாஜகவில் சேரட்டும் என பேசினார். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறினார்.