ஆலங்காயம், ஜூன் 6: சென்னையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட, சரக்கு ரயில் நேற்று காலை 6 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் மீது 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பயணித்தார். இதனைக்கண்ட விண்ணமங்கலம் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அந்த ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு வந்ததும் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது வந்த நபர், உயரழுத்த மின் வயர் அருகே இருந்ததால் உடனடியாக மின் இணைப்பை ரயில்வே அதிகாரிகள் துண்டித்தனர். பின்னர் ரயில்வே போலீசார் சென்று அந்த நபரை கீழே இறங்கும்படி கூறினர்.