ஆலங்காயம்: ஆலங்காயம் அருகே விவசாய நிலத்துக்குள் ஒற்றை தந்த காட்டுயானை நுழைந்தது. இதையடுத்து வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூர் மற்றும் நாயக்கனூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதிகளை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஒற்றை தந்தம் கொண்ட காட்டு யானை நடமாட்டம் உள்ளதாகவும், அவ்வப்போது விளை நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை யானை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாகவும் அப்பகுதியினர் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.