திருப்புத்தூர் : திருப்புத்தூர் சிவகாமி அம்மன் சமேத திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று தெப்பம் வெள்ளோட்டம் நடைபெற்றது.
திருப்புத்தூர் சிவகாமி அம்மன் சமேத திருத்தளிநாதர் திருக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று ஜூன் கொயேற்றத்துடன் துவங்கிறது. வரும் 11ம் தேதி தேரோட்டமும், 12ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மண்டக படிதாரர்கள் கார்காத்த வெள்ளாளர்கள் சமூகத்தினர் ரூ.25 லட்சம் மதிப்பிலான மரத்திலான புதிய தெப்பத்தை வடிவமைத்திருந்தனர்.