விராலிமலை அருகே கார் மோதி புள்ளி மான் பலி

விராலிமலை: விராலிமலை இலுப்பூர் சாலையில் நேற்று 2 வயதுடைய பெண் புள்ளி மான் திடீரென சாலையை கடக்க முயன்றது.அப்போது இலுப்பூரில் இருந்து திருச்சியை நோக்கி ஒருவர் ஓட்டி வந்த கார் மான் மீது மோதியதில் மானின் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் வனச்சரக அலுவலர் பொன்னம்மாள் மற்றும் வனக்காவலர்கள் இறந்த மானை காரில் ஆவூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு உதவி கால்நடை மருத்துவர் பெமினாபேகம் மானை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அதை கீரனூர் வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து சென்று குழி தோண்டி புதைத்தனர்.

Related Stories: