இஸ்லாமாபாத்: பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர் என்று முன்னாள் பிரதமரின் மகள் மரியம் நவாஸ் தெரிவித்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகளான பிஎம்எல்-என் துணைத் தலைவர் மரியம் நவாஸ், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஒரு கும்பலுக்கு தலைவர்; தீவிரவாதிகளை விட ஆபத்தானவர். அவரது அரசியல் பிரசாரம் பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. தனது கட்சி தொண்டர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்றார்.