பாஜ பிரமுகர் கொலை மேலும் 2 ரவுடிகள் கைது

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை முக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்த  பாஜ எஸ்.சி.பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் பாலசந்தர் (30), கடந்த 24ம் ேததி இரவு, அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தர்கா மோகன் மகன்கள் பிரதீப், சஞ்சய் அவரது நண்பர்களான கலைவாணன் ஆகியோரால், கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரதீப், சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியான ரவுடி தினேஷ் (எ) புளிமூட்டை தினேஷ் (26), அவரது சகோதரர் விக்னேஷ் (22) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related Stories: