திருவனந்தபுரம்: விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் திருவனந்தபுரம் அருகே உள்ள கீழாரூர் பகுதியில் கடந்த 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமின் கடைசி நாளான 22ம் தேதி 200க்கும் மேற்பட்ட பெண் தொண்டர்கள் கலந்து கொண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் முன்வரிசையில் சென்ற 4 பெண்கள் வாள் ஏந்தி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.